“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 9 ஜூன், 2010

காக்க! காக்க! இதயம் காக்க!


இதயம் ஒரு கைப்பிடி அளவுதான். ஆறடி உடலின் கட்டுப்பாடு அந்தக் கைப்பிடிக்குள். தலை முதல் கால் வரை ஏன் மூளை உட்பட் அனைத்து மாநிலங்களும் மைய அரசாம் இதயத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இந்த இதயத்தில் சிறு பிரச்சனை என்றால் இதயக்கோவிலில் இடம்பெற்றுள்ள உயிராகிய ஜீவன் ஓடிவிடும். உடல் ராஜ்ஜியம் அழிந்து போவது உறுதி.

உன்னை என் இதயத்தில் வைத்துள்ளேன் என்று காதலி காதலனைப் பார்த்துக் கூறுவதும் என் இதயமே நீதான் என்று காதலன் காதலியைப் பார்த்துக் கூறுவதும் இதயத்தின் முக்கியத்துவம் கருதியே. தோல்வி கண்டவிடத்து சுக்கு நூறாக உடைவதும் அந்த இதயம் அல்லவா?

எல்லா நோய்களும் ஆரவாரங்களோடு வரும்போது அமைதியாய் வந்து ஆளை அழைத்துக்கொண்டு போகும் ஒரே நோய் இந்த மாரடைப்பு ஒன்றுதான். அதிக உணவு, உழைப்பு, கவலை, கொழுப்பு போன்ற பல காரணிகளால் ஏற்படுவது இருதய நோய். இந்த இதய நோயே மாரடைப்பு என்று கூறப்படுவது இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு உயிர் இழப்புக்குக் காரணமாகிறது. இதற்கு இதய அறுவைச் சிகிச்சை முறை (Open Heart Surgery) கண்டறியப்பட்டது. இந்த இருதய அறுவை சிகிச்சை முறையில் இந்த அடைப்பை நீக்கி குணப்படுத்தினர். அதாவது அடைத்துக்கொண்டுள்ள அல்லது சிதைந்து போன இரத்தக் குழாய்களுக்குப் பதிலாக மாற்றுக்குழாய பொருத்தப்பட்டு மாரடைப்பு போக்கப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட பணச்செலவும் காலச்செலவும் ஆனது. அத்துடன் நோயாளி மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் கூடுதலாகக் கருதப்பட்டது, தவிர இல்லம் திரும்பிய பின்னரும் கடின வேலைகளுக்கு முழுக்குப் போடவேண்டி இருந்தது.

இதற்கு அடுத்து நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி (ANCIOPLASTY) என்ற முறை கையாளப்பட்டு வருகிறது. இது காற்றடைத்த பலுன்களைச் இரத்தக்குழாய்களில் செலுத்தி தண்ணீர் அழுத்தத்தின் மூலம் அடைப்பு உள்ள இடத்தில் வெடிக்கச்செய்வர். பலூன் வெடிக்கும் போது ஏற்படும் மிகு அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். இம்முறயில் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய நாட்களும், பிறகு ஓய்வெடுக்கும் நாடகளும் குறைகிறது. ஆனால் சாதாரண இரத்த அழுத்தத்தைப்போல 75 முதல் 500 முறை பலூன் வெடிக்கத் தேவையான அளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால் பலூன் வெடிக்கும் போது வேறு இடத்தில் இரத்தக் குழாய சேதம் அடையவும் அங்கு இரத்தக் கசிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிறு நீரகப் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இப்போது இந்த இரண்டு முறகளையும் புறந்தள்ளி புது முறையான ’செலேஷன் தெரபி’ (CHELATION THERAPY) மெல்ல மெல்ல தன் காலை ஊன்றி வருகிறது மாரடைப்பு மருத்துவத்தில். இச்சிகிச்சை முறையில் கத்தியில்லை; ரத்தச்சேதமில்லை. பல நாட்கள் மருத்துவமனை வாசம வேண்டியது இல்லை. மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய தேவையும் இல்லை. இம்மருத்துவத்தில் சுமார் 15 முதல் 18 பாட்டில்கள் வரை இரத்தமும் அதனுடன் எதிலின் டைஅமைன் டெட்ரா அசிட்டிக் ஆசிட் (EDTA – Ethylene Diamine tetra acetic acid ) என்ற மருந்தும் உட்செலுத்தி அடைப்பு நீக்கப்படுகிறது. இம்முறைக்கு சுமார் ரூபாய் 60,000 செலவாகிறது என்கின்றனர். இம்முறை மருத்துவத்தை இந்தியாவில் நான்கு அல்லது ஐந்து மருத்துவர்கள் தான் செய்துகொண்டு இருக்கின்றனர். சென்னை, மும்பை, பங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்தான் இம்மருத்துவம் தொடங்கியுள்ளதாக மருத்துவ கழகம் கூறுகிறது.

நல்லா சாப்ட்டாரு. நல்லாத்தான் பேசிட்டு இருந்தாரு; திடீர்னு மூச்சு கொஞ்சம் முட்டுதுன்னு சொன்னாரு. போய்ச்சேந்துட்டாரு. எவ்வளவு நல்ல சாவு? நோய்ல விழுகாம, பாயில படுக்காம.....கொடுத்து வச்ச மனுசன்... என்று நாம் பெருமையாக பேசியதெல்லாம் பழைய பல்லவி என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அன்றே இப்பல்லவியைப் பாடுபவரைப் பார்த்து இது நல்ல சாவு இல்லை. முறையற்ற வாழ்க்கை முறையால் வந்தது என்று தனக்கே உண்டான அங்கதம் ஏற்றிக் கூறுவார் திருமூலர்.

பொருளாசை கொண்டு பொருள் குவித்தார், வகை வகையான உணவை அளவின்றி உண்டு உடலைப் பெருக்கினார். தொடர்ந்து பெண்டிருடன் கூடி இன்பம் நுகர்ந்தார்.. ஒரு நாள் இடப்பக்கமாக இதயம் சிறிது வலிக்கிறது என்றார். படுத்தார். விடுத்தார் உயிரை. என்று திருமூலர் கூறுவதைப் பாருங்கள்.

”அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மத்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தழிந்தாரே”

இந்த எக்காளப்பாட்டு எதற்கு? உரிய மருந்தைச் சொல்லுங்க என்று நீங்கள் கூறுவது புரிகிறது. ஒன்றும் பெரிய விஷயமில்லைங்க..

இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்த இன்பத்தைக் காட்டும்.

இப்பப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். பசித்தபின்பு அளவுடன் உண்பது இதய நோய் வாராது இருக்க முதல் படி..

இரண்டாவது படி அத்தியாவசியத் தேவை. முறையான மூச்சுப்பயிற்சி. இதையும் திருமூலர் வாய் மொழியால் அறியலாம்.
”காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே”

ஆமாங்க முறையான மூச்சுப்பயிற்சி (தியானம்) செய்பவரை இதய நோய் என்ற எமன் அண்டமாட்டார். மேலும் சில டிப்ஸ். இதுவும் திருமூலர் கொடுப்பதுதான்.

”திண்ணம் இரண்டுள்ளே சிக்கல் அடக்காமல்
பெண்ணின் பாலொன்றைப் பெருக்காமல் உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்உருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி”

புரியுதா.பொருளையும் நானே கூறிவிடுகிறேன். அதாவது மலசலத்தை அடக்காமல், பெண் போகத்தைப் பெருக்காமல், நீரைக்காய்ச்சியும் (நீரைச் சுருக்கியும் மோரைப் பெருக்கி) கட்டித்தயிராகச் சாப்பிடாமல் நீர்த்த மோராக மாற்றியும் , நெய்யைப் பயன்படுத்தும் போது நன்கு உருக்கியும் பயன்படுத்தினால் பிணி போகும் என்கிறார். இருதய நோயும் போகும் என்பதே உண்மை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது பின்வருவது.

“தன் மனையாளும் தானுமிருக்கையில்
தாவி வேறுமனைத் தேடிப் புகுந்தாலும்
நன் மனைவியின் போகம் மிகுந்தாலும்
நல்லுணவென்று அதிகம் புசித்தாலும்
மாலையில் எண்ணெய் மூழ்கிக் குளித்தாலும்
சின்ன மாமலச் சிக்கல் இருந்தாலும்
தேடிப் பாரினில் வியாதிகள் வருமே..”

அதே விஷயம்தாங்க கொஞ்சம் கூடுதலாக அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யாகேபு சித்தர் என்ற இந்த மருத்துவர். கேட்டாத்தான் என்னங்க...?

மாரல்: இதயமே இல்லாமல் உலவுபவர்களைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. இதயம். இருப்பவர்கள் முறையோடு வாழ்ந்து அதை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும்..அதற்கு நம்ம சித்தர்கள் சொன்ன முறைப்படி வாழ்த்தால் இதயம் தொடர்பான நோயில் இருந்தும், மாரடைப்பில் இருந்தும் தப்பிக்கலாம்.. வாழ்க்கை முறையைச் சீராக அமைத்துக்கொள்வது நம் கையில்தானே உள்ளது... .சிந்திப்பீர்களா நண்பர்களே....



சனி, 15 மே, 2010

"கறுப்பு நிலா" வில் நெருப்புப் பொறிகள்.

“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டா விட்டால், அவன் கவிஞனே ஆக முடியாது” என்று பெரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார். வைரமுத்து பதெனேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை மேகங்கள்’. மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்தசாரதி.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பாது கடுமுயற்சியும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர் கொள்ளவும் வைரம் பாய்ந்த நெஞ்சம் வேண்டும். அத்தகு எதிர்ப்புகளைச் சந்தித்த கவிதையே கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கருப்பு நிலா’ .

திறனாய்வுத் திறன் என்பது படைக்கும் திறன், சுவைக்கும் திறன்
இவ்விரண்டிலும் வேறுபட்டது என்பார் தா. ஏ. ஞானமூர்த்தி. இம்மூன்றும் ஒருங்கே பெற்றவர் கவிஞர் வைரமுத்து என்பதை இத்திறனாய்வுக் கவிதை புலப்படுத்தும். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற அறத்தை நிலைநாட்ட எழுந்த தமிழரின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாகக் கொண்ட கற்பு நிலா கண்ணகியைத் திறனாய்வு என்ற தணலில் சுட்டெரிக்க வந்தது இந்தக் கறுப்பு நிலா! பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் பாத்திரப் படைப்பையும் கவிஞர் வைரமுத்துவின் திறனாய்வுப் பார்வயையும் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கியம் என்பது மனிதப் பெருமானங்களை (Human Values) மிகுந்த வன்மையுடன் கற்பிக்கிறது. இந்தப் பெருமானங்கள் அந்தப் பாத்திரங்களின் ஊடாட்டங்களின் மூலமும் அவற்றின் கூற்றுகள், செயல்கள் மூலமும் தெரிய வருகிறது என்பார் (கா. சிவத்தம்பி)
”தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால், தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து”
என்றும்

“தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்றும்
”மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்”
என்றும்

“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத்தெயவம்
யாம் கண்டிலமால்”
என்றும்

”ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
என்றும்

போற்றுவதுடன், பத்தினித் தெய்வமாக, பதிகம் (5, 36), வஞ்சின மாலை (50), அழற்படுகாதை (155), கட்டுரைக் காதை (14, 177), குன்றக்குறவை (19 - 70), காட்சிக்காதை (74, 129), நீர்ப்படைக்காதை (15, 128), நடுகல் காதை (210) ஆகிய இடங்களில் புகழ்ந்து ஏத்துவார் இளங்கோவடிகள். இத்தகு சிறப்பு வாய்ந்த கவிஞர் வைரமுத்து பத்தினியாய நீயிருந்தும் பயனில்லை என்று கூறுவதுடன் செல்லுபடியாகாத சிறுகாசு (12), கல்லாகிப் போனவளே (23), பேதைத் தலைமகளே (50), பாவி, படுபாவி (58), பித்தம் பிடித்தவள், பேதைப் பெரும் பேதை (81), தேராதாள் (90) என்றெல்லாம் நெஞ்சு நோக ஏசுகிறார். இத்துணிவு இக்கவிஞரிடம் பிறக்கக் காரணம் கண்ணகி சினம் கொள்ள வேண்டிய காலத்தில் அமைதி காத்தவளாகவும், அமைதியாக ஆராய்ந்து நோக்க வேண்டிய காலத்தில் சினம் கொண்டவளாகவும்
முரண்பாடுகள் நிறைந்தவளாகக் காணப்படுவதே ஆகும்.
” கற்பு வழிப்பட்டவர் பரத்தையை ஏத்தலும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப”
என்று கலவியும், புலவியும்மாக கொண்டானுடன் கூடிவாழ்தலையே கற்புடைமை என்று வகுக்கும் தொல்காப்பியம்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்று திருவள்ளுவமும் இதனைச் சுட்டும். கணவனின் மனநிலையை அறிய உதவுவது ஊடல்.
அதனால்தான் பிற பெண்களைப்பற்றிப் பேசுவதும், பரத்தையைப் பற்றிப் பேசுவதும் தலைவனின் மனவறி கருவியாம் என்பார் தொல்காப்பியர். வடு நீங்கு சிறப்பான மனையறத்தை மறந்து மாதவியிடம் விடுதலறியா விருப்பினனாகக் காம வாழ்வு
வாழ்கிறான் கோவலன். இந்நிலையில் பெற்றோர், உற்றார், உறவினர் என எவரையும் கோவலனிடம் அனுப்பித் தன் நிலையை உரைக்கச் செய்ய வில்லை கண்ணகி. பரத்தமை மேற்கொண்ட கண்ணகியிடம் தோழியை தூது அனுப்புவது சங்க காலம் தொட்டே இருந்து வரும் மரபு. கண்ணகியின் உயிர்த்தோழி தேவந்தி கண்ணிகியைப் போன்றே தலைவனைப் பிரிந்து, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய பொய்கையில் மூழ்கி மீண்டும்
கணவனிடம் கூடப் பெற்றவள். அவளிடம் கூடத் தன் நிலையைக் கூற மறுக்கிறாள் கண்ணகி.

இவ்வாறு கணவனைக் காக்கத்தக்க பருவத்தில் காவாமல் விட்டுவிட்டு கதை முடிந்த பின்பு கதறுவதைக் கண்டு
“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப்போனதம்மா காத்துவைத்த உன் சொத்து”
என்று பாடுகிறார்.

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு பொன்னே, கரும்பே, தேனே என்றெல்லாம் பாராட்டும் தலைவனின் காதலை எண்ணிப் பூரித்த கண்ணகி அவையெல்லாம் மோகத்தால்
கூறிய வெற்று மொழிகள் என்பதைக்கூட அறிய முடியாத மடமகளாக இருக்கிறாள். இதனை,

“பட்டுத்துகில் விரித்த பவளம்பூம் பஞ்சனையில்
தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல் தடவிப்
பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைப் பற்றி
முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே
அறியாமல் போனாயே: அதுவுன்றன் பிழையலவா?”


என்று அவள் மீது எல்லையில்லா கரிசனையைக் கொட்டுகிறார்.
“பிரிக்காத ஏடுன்னை பிரிந்தெங்கோ போனானே” என்றும் கூறுகிறார். இந்த அடியில் ‘கோரிக்கையற்று கிடக்குது இங்கு வேரிற் பழுத்த பலா’ என்ற பாரதிதாசனின் ஆதங்கம் வெளிப்படுவதைக் காணலாம்.

புறத்தொழுக்கம் கொண்டு மீண்டு,அதாவது மாதவியின் இல்லம் விடுத்து மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் புகுகிறான். அப்போதும் அவனது இல்லாமையைக் கண்டு இரங்கி சிலம்பு உள்ளது கொள்க என்று உதவுபவளாகவே அதுவும் நகைமுகம் காட்டி உதவுகிறாள். இளங்கோவின் கூற்று இதோ.
“நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்புல கொண்ம”
இந்த நகை முகமே சமுதாய அக்கறை கொண்ட வைரமுத்து என்ற இளங்கவியின் கடுஞ்சினத்திற்குக் காரணமாகிறது.. (இக்கவிதையைப் படைக்கும் போது கவிஞர் வைரமுத்து இளநிலை முதலாமாண்டு மாணவர்) பாவி, பேதை, பித்தம் பிடித்தவள் என்று ஏசவும் செய்கிறது.

”மோகக் கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
சிரித்துக் களித்துச் செவியெல்லாம் தேன்பாய
உரித்த சுளைபோலும் உன்னிதழை நீ திறந்து
சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ? என்று வாய் நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி”

என்று அடிவயிற்றில் இருந்து சொற்கள் வெடித்துச் சிதறுகிறது. உன்மத்தனுக்கும் காமாந்தகனுக்கும் தலைமை தந்து பணிந்து நிற்கும் பெண்ணடிமைத் தனத்தைக் களைந்து எறியும் வண்மை ”அநியாயக் காரனுக்கு ஆரத்தி எடுத்தவள் நீ” என்ற அடியில் வீறு கொண்டு எழுகிறது.
பாண்டியன் ஆராயது தீர்ப்பு வழங்கியதை ’தேரா மன்னா’ என்று பழித்துரைக்கும் கண்ணகியின் நிலையும் அவனைப் போன்றதே.
“பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”என்று வஞ்சினம் கூறி மதுரை மக்களை அழித்தது ஒரு சிறிதும் பொருத்தமற்ற செயல். பொறுமை பெண்களின் குணம் என்பதை கண்ணகி எள்ளளவும் இந்த இடத்தில் போற்றாதது, பாண்டியனை வெஞ்சினத்தோடு அழித்தது, பின்பு அவளே ‘தென்னவன் தீதிலன்’ என்று செங்குட்டுவனிடம் கூறுவது இப்படி பொங்கி எழ வேண்டிய காலத்தில் அதிக பொறுமையும் , சினத்தை அடக்கி ஆள வேண்டிய கால்த்தில் ஆறா சினமும் கொண்ட கண்ணகியின் குணம்,

“அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே
அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்”
என்று கவிஞரைக் கூற வைக்கிறது. அத்துடன்

“மன்னன் அல்லன் தேராதான்
மலர்க்கொடியே நீயேதான்”என்று தார்மீகக் கோபமாக வெடிக்கிறது கவிமனம.இறுதியாக
”குலத்து மாந்தர்க்கு கற்புஇயல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்தும் அந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”

என்பார் பாரதியார். ஆனால் இன்றளவும் பெண் என்றால் கண்ணகியாய் வாழ்வதைத்தான் எழுதி வைத்த மறையாகத் தமிழ்ச் சமுதாயம் கொண்டுள்ளது. ‘பத்தினி’ என்ற சொல்லே சிலப்பதிகாரக் காலத்தில் இருந்துதான் வழக்கில் வந்தது என்பர். இன்றும் ‘கண்ணகி’ என்பது பத்தினி தன்மை என்பதன் குறியீடாகத் தமிழ் மண்ணில் பேச்ப்பட்டு வருகிறது. ஆண் வர்க்கத்தின் கொடுமைகளை எதிர்த்துக் கேட்கும் திராணியற்றவர்களாக, எதிர்த்துக் கேட்கக் கூடாதவர்களாக, கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டு இருப்பதே கற்பின் வரையறை என்றால் அக்கற்பு இவ்வுலகத்தில் இல்லாது ஒழியட்டும் என்று கற்பு என்ற
விலங்கில் தன்னைத் தானே பூட்டிக் கொண்ட பெண்களுக்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. இளமைக் குருதியின் வேக ஓட்டம் கவிதை ஓட்டத்தைச் சூடேற்றுகிறது.

”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
என்று கலைஞர் இமைவிரிப்பது சரிதானே....

வெள்ளி, 7 மே, 2010

கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்...


வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!


பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..... அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....பாவம் பல்..

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும் ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு:
இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera) பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது. கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர் கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.




துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!


"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"





என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.

http://www.pradeepastrosolution.com/images/planets.gif

கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.


வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.

மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.

மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?

கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?


மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரு
ம்...


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieAc1EQvXg3AGyuhkdKNR6GNnpCRmymXdRaPHIBUv-x9lxzsLZyW_o2Gc0rqBAAmiFVlyeY-CiiCT3sCmaUkELik6Lst6h3xMwVUKFPvhLYcWlY_sQS-25dUICM0gWxj1k2f9NOw8HAIw/s400/DSC05614.jpg




நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)






இவரைப் பார்த்து விட்டு எண்ண நினைக்கத்தோன்றுகிறது. இவர் தன் உடலின் ஒரு பக்கத்தை மறந்தவர். (பொய் பொய் என்று ஒரு குரல் கேட்கிறது.....) உன்னக் கண்ட துண்டமா வெட்டிப்போட்டாத்தான் என் மனம் ஆறும் என்று யாரோ கூறுவது என் காதில் விழுகிறது. இல்லை இல்லை கூறக் கேட்டிருப்போம். அது போல அவனை மாறு கால் மாறு கை வாங்கனும் என்று ஆத்திரத்துடன் சொல்வதையும் கேட்டிருப்போம். புரட்சித் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இந்த மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனைதான்.

பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்

மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.

மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....



ஆதிரா..

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஆவி வருமா?? தூது வருமா??




”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள் கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத் தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....


கொட்டாவி என்றவுடன் நாம் கெட்ட ஆவி என்று நினைத்து மூதேவித்தனம் என்று வசை பாடும் பெரியோர்கள் நம்மிடம் இன்றும் உண்டு. ஆனால் இந்த நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும் உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத வேலை.

.
.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.

ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

சனி, 17 ஏப்ரல், 2010

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் சீக்ரெட்.....



http://image.made-in-china.com/2f0j00hvVQRlcWHpoy/290mm-Sanitary-Napkin-Blue-Center.jpg


இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பழக்கமாக இன்றைய வேக உலகத்தின் காரணம் என்று சொல்லலாமா? சுகாதார நோக்கம் என்று சொல்லலாமா? பெண்கள் மாத விடாய்க் காலங்களில் துணி நேப்கினைப் பயன்படுத்தும் பழைய முறையை மறந்து விட்டோம். சிறியதும் பெரியதுமாகப் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மருந்துக் கடைகளை அலங்கரிக்கும் நேப்கின்களைப் பயன் படுத்தும் புதுப் பழக்கத்திற்குள் குடிபுகுந்து விட்டோம். வீட்டு அலமாரியிலும், மாதாந்திர பட்ஜெட்டிலும் முதல் இடம் இதற்குத்தான். எந்த முறையிலும் உள்ள ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

http://www.thethingreenlineshop.com/files/2006101/uploaded/ob_tampons_pink_canada.jpg

சானடரி நேப்கின் (sanitary napkin) , டேம்போன்ஸ் (tampons) பயன்படுத்துபவர்களுக்குப் பரவலாகக் கருப்பைப் புற்று நோய் (cervical cancer), கருப்பைக் கட்டிகள் (tumour) வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

இவற்றிக்குக் காரணம் இந்த சாணடரி நேப்கினில் இடம்பெற்றுள்ள ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்ற மூலப்பொருள்தான். இது சிலிகாவில் அமிந்துள்ள ஒரு கூறு. சிலிகா என்பது மணலில் இருந்து கிடைக்கப்பெறும் இரசாயனப்பொருள். நேப்கினும், டேம்போன்ஸும் உள்ளே பருத்தியை வைத்து, மேலே இந்த் ஆஸ்பெஸ்டாஸால் ஆன கவரால் மூடப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸில் ரேயான் (rayaan) என்ற ஃபைஃபர் உள்ளது. இது ஈரத்தை உறிஞ்சும் தனமை உடையது.

பொதுவாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நின்றவர்களுக்குத் தெரியும், அது எத்தனை சூட்டை உமிழும் என்று. நேப்கினை மூடியுள்ள ஆஸ்பெஸ்டாஸ் உடலில் நேரடியாகப் பட்டுக்கொண்டு இருப்பதால் சூட்டைக் கிளப்பி, உதிரப்போக்கைக் கூடுதலாக்குகிறது. இதனால் பயன்படுத்தும் நேப்கின்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாளொன்றிற்குச் சுமார் மூன்று நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்தும் ஒருவர் இச்சூட்டின் காரணமாக ஐந்து வரை பயன்படுத்துவார். எனவேதான் இம்முறை, விற்பனையைக் கூட்டும் உத்தியாக நேப்கின் தயாரிப்பாளர்களால் கையாளப்படுகிறது. மாத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் முப்பத்தெட்டு மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டுகளில் எத்தனை நேப்கின்ஸ் பயன்படுத்துவர். இதில் நேப்கின் தயாரிப்பாளர்களின் லாபம், அதனை பயன்படுத்தும் பெண்களின் உடல்நிலை பாதிப்பு இரண்டையும் பெண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் நேப்கின்கள் அதாவது ஒரு மாதவிடாய்க்கு ( 5 X 2 = 10) ஆண்டுக்கு (12 X 10 = 120) சராசரியாகப் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டு முப்பத்தெட்டு.... ( 38 X 120 ) இது ரொம்பப் பெரிய கணக்கு.. நான் கணக்குல ரொம்ப வீக்கு... தப்பா சொல்லிட்டா? அதனால இந்தக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் டை ஆக்ஸின் (dioxin) என்ற மூலப்பொருளும் இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இது நேப்கினின் தூய வெண்மை நிறத்திற்காகப் பயன்படுத்தப் படும் பிளீச் (bleach). இந்த பிளீச் புற்று நோயை ஏற்படுத்தும் தனமை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது. இந்த டைஆக்ஸின் எவ்வளவு குறைந்த அளவு சேர்க்கப்பட்டாலும் கொடிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental protection agency) அறிக்கை விடுத்துள்ளது. டைஆக்ஸின் சிறிதளவு உடலில் சேர்ந்தாலும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை, இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர். மேலும் உடலில் பட்ட பிளீச்சின் அளவு குறையாது, நாள்பட நாள்பட அதிகரித்து நம் உடலில் உறுதியாக இடம் பிடித்துக்கொள்ளும்.

இந்த நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு விளைவு அதிகம் என்றே சொல்லலாம். ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில் பெண்கள் தூய பருத்தியினால் ஆன நேப்கின்ஸ், டேம்போன்ஸ் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். நம் நாட்டில் இப்போதுதான் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.

பிரச்சனையைத் தீர்க்க மாற்று வழிகள்:
1. இன்றைய இயந்திர வாழ்க்கையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், பெண்களை எத்தகு ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெற வேண்டும்.

2. டைஆக்ஸின் சேர்க்கை மற்றும் வேறு எந்த இராசாயனப் பொருளும் கலக்காத நேப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது. துரஷ்டவசமாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இத்தகு பக்க விளைவுகள் இல்லாத் நேப்கின்களைத் தயாரிக்கின்றனர். அவற்றை இனம் கண்டு வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.

3. வெறு வழியின்றி இவ்வகை நேப்கின்களைப் பயன்படுத்தும் வேளைகளில் அதிகபட்சமாக ஒரு நேப்கினை மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க......
பிளீஸ்......


ஆதிரா..

புதன், 14 ஏப்ரல், 2010

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்....


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png/300px-1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

http://tippinthescales.files.wordpress.com/2009/04/planets.jpg

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!



குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். பாருங்க எத்துனூண்டு இருக்காருன்னு..

என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.







ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..



சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.


http://www.ilo.org/dyn/media/images/watermark/cn0141.jpg

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம்.

http://wwwdelivery.superstock.com/WI/223/105/PreviewComp/SuperStock_105-W2324.jpg

போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??









சனி, 10 ஏப்ரல், 2010

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?




ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இல்லை ராக்கி கட்டும் உன்னதமான சகோதர உறவைக் காட்டும் ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு அல்ல. இது வேறு..... இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்றால் என்னங்க? இது ஜப்பானியர்களின் புராதன மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உரைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்
நீர் – இரத்தம்
காற்று – உயிர் சுவாசம் (பிராணவாயு)
நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)2. சக்தியூட்டல் - (ENERGIZING0)3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)4. இணைத்தல் - (KINTTING – UNITING)5. கவசமளித்தல் - (INSULATING

தூய்மைப்படுத்துதல்


R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.


சக்தியூட்டுதல்


E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.

தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்

I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.


இணைத்தல்

K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.


கவசமளித்தல்

I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.



அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..

வியாழன், 8 ஏப்ரல், 2010

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!


http://2.bp.blogspot.com/_hlxGFZiqsfg/SWdeV5XRb5I/AAAAAAAABpA/Kvyg4VC5Gm0/s400/noodles.jpg

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

http://dale311.files.wordpress.com/2009/10/ramen-noodles.jpg

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்.

http://i446.photobucket.com/albums/qq190/gen_marple/ChickNoodleSoup.jpg

பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை.. முக்கியமாக குழந்தைகள்....... கவனிப்பீர்களா தாய்மார்களே.......

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்.... ப்ளீஸ்.......



ஆதிரா..

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!



”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”


இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.
http://recipes.malayali.me/wp-content/uploads/2010/01/IMG_7777-400x285.jpg

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.


 http://i5.photobucket.com/albums/y152/boo_licious/misc4/chapati.jpg

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...



ஆதிரா..

திங்கள், 5 ஏப்ரல், 2010

மனநிலையையும் புவி ஈர்க்குமா????

http://www.israelshamir.net/Images/Tsunami.jpg
புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
A young boy holds up a sign that reads:
தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு.
A young boy waits for his lunch
நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.

A family mourns the death of their child
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது.
A woman and her son carry bags as they walk amid the destruction in sumatra
உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.



ஆதிரா

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

குடிநீர் குப்பி

http://store.weddingsolutions.com/wedding_store/images/medium/mini-TKB88047.jpg

நண்பர்களே நீங்கள் குடிநீர் குப்பி (mineral water bottle ) பயன் படுத்துபவரா???? கொஞ்சம் இதப்படிங்க!!!!!!![/b]
நாம் வங்கிப் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களில் சுற்றியுள்ள லேபிளில் (labil ) "பாட்டில்களை மீண்டும் பயன் படுத்தாதீர்கள் " (Crush the bottle after use) என்று எழுதியிருப்பதைப் படித்து இருக்கிறீர்களா? படித்ததைச் செயல்படுத்தி இருக்கிறீர்களா? வகை வகையாக பிரிட்ஜ்ஜில் பாட்டில்களைச் சேமித்து வைத்து இருப்பீர்களே!!! இதைப் படிங்க முதல்ல.
இது சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு சம்பவம். ஒரே மினரல் வாட்டர் குப்பியைப் பதினாறு மாதங்கள் பயன்படுத்திய பனிரண்டு வயது சிறுமி பரிதாமாக உயிர் இறந்தாள்.

இன்றைய காலகட்டத்தில் பயணத்தின் போது கையில் தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் மறைந்தே போய விட்டது. கை வீசிக் கொண்டு கிளம்பிச் செல்வதும், ஆங்காங்கு கடைகளில் கழுத்தில் சுரூக்கிட்டுத் தொங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கிக குடிப்பதும் நாகரிகமாகி விட்டது. இதனால் சுருக்கு உங்கள் கழுத்துக்குத்தான். தெரிந்து கொள்ளுங்கள்.
பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை. இந்த குப்பிகளைச் சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன் படுத்துகின்றனர். ஏன் பிரிட்ஜில் குளிர் நீர் சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றனர். இன்னும் கூறப்போனால் பல இல்லங்களில் தண்ணீர் அருந்த டம்ப்ளர்களைப் பயன் படுத்தும் வழக்கம் கூட குடிநீர் குப்பிகளாக மாறி விட்டது.
எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆன
பாட்டில்களையும் பெட் (pet ) என்பர். சான்று ஸ்ரிபெட் பாட்டில்கள். பெட்(pet ) என்பது பாலி எததிலின் டேரப்தலேட் (Polyethylene terephthalate) என்பதின் பெயர் சுருக்கம் ஆகும். இந்த பெட் என்னும் ரசாயனப் பொருளில் டை- எத்தில் ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA) என்ற
ரசாயனப் பொருளும் கலந்துள்ளது. இந்த டெகாவில் (DEHA ) தான் ஒளிந்து இருக்கிறது புற்று நோய்க்கு வித்திடு பேராபத்து
. குப்பிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாட்டிலின் மூலப்பொருளான டெகா பிரிந்து தண்ணீரில் கலக்கிறது. அதிலும் வெந்நீரை ஊற்றி வைக்கும் போது இதன் வீரியம் இன்னும் கலை கட்டுகிறது . இந்தப பாட்டில்களை அதிகபடியாக ஒரு வாரத்திற்கு மேல் பயன் படுத்துவது ஆபத்தை விளைவிப்பதாகும்.

நாம் கவனிக்க வேண்டியது:


வாட்டர் பாட்டில்களை வாங்கும் போது கண்டிப்பாக நாகவனிக்க வேண்டியது, அதன்அடிப்பகுதியில் ஒரு முக்கோணமும் அதனுள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த எண் ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே பாட்டில்கள் தொடர்ந்து பயன் படுத்துவதற்குப் பாதுகாப்பானது. எண் ஐந்திற்கு குறைவாக

இருப்பின் கண்டிப்பாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய (use and throw) குப்பிகளில் எண் ஐந்திற்குக் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் எண் ஒன்று (1 ) தான் இருக்கும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWF5DiF_SezY9CcT4yyySeUyMEivRdt7FQ9MZkewGb1CfFSkobWE5XNY1-NTRazFeZmzYgAjP5X6Mg2sJD76QbNL0BTlU_zm6K6F8Q5m08QpUStAj1vTx6swU3Ljv9GkKoe-h4TUSM20Y0/s320/bottles.jpg
இக்குப்பிகளில் அடைபடும் தண்ணீருடன் இந்தக் குப்பிகளின் கெமிகல் எளிதாகக கலந்து விடும் தன்மையது.
பிளாஸ்டிக் குப்பிகளால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தன்நீருக்கல்ல; அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் போகும் உங்களுக்குத்தான். அலட்சியம் வேண்டாம். அல்பத்தனமும் வேண்டாம் நண்பர்களே. வரும் முன் காப்போம். 



நன்றி குமுதம் ஹெல்த்


மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

http://www.istockphoto.com/file_thumbview_approve/720249/2/istockphoto_720249-elderly-couple-hugging.jpg
பேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.
இணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால் கட்டிப்பிடி மருத்துவம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

http://farm4.static.flickr.com/3257/3244763186_1a083bd70f.jpg?v=1233509879
காற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு
விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.

http://i9.photobucket.com/albums/a94/krzy4evr/myspace%20graphics/1_old_couple.jpg
மேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.
http://images.veer.com/IMG/PIMG/MPP/1559039_P.jpg

ஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


ஆதிரா