வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 10 நவம்பர், 2012
சனி, 18 பிப்ரவரி, 2012
தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு....
தேனினும் இனிய தம்பி உதயாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
தேனாக இருந்தாலும் சுவைப்பதற்கு
திகட்டி விடும் சிலநாளில்
தினந்தினந்தான் கேட்டாலும் தித்திக்கும்
திகட்டாத குரலினிமை
கானெழுந்த சந்தனத்து நன்மணமாய்
கனித்தமிழில் மணக்கின்றாய்
ஊனெழுந்து உதிர்க்கின்ற மொழியாலே
உலகத்தை இழுக்கின்றாய்
இனிமை பூத்த நிலவொளியில்
இரவு பூக்கும் இசைமலர் நீ
இரவெல்லாம் காய்ச்சி வைத்த
இளைய தமிழ் அமுதம்நீ
மழைத்துளிகள் ஒன்றாகிக்
கொட்டுகின்ற பாட்டருவிநீ
மனமெல்லாம் அன்பாலே
நிறைந்து விட்ட தேனருவிநீ
வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ
வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ
தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ
தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ
ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க
உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று
போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி
பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!
இது தம்பி உதயாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி ஜெய் இணையதள வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.
செவ்வாய், 25 அக்டோபர், 2011
வியாழன், 20 அக்டோபர், 2011
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!
சிறகு....
உணர்வுகளை
கனவுகளை
லட்சியத்தை
ஒவ்வொரு
இறகாக
உதிரச் செய்த
உறவுகளை
உதிர்த்துவிட்டு
பறக்கத் தொடங்கினேன்!!
சிறகே இல்லாமலும்
வானத்தில்
பறக்கக்
கற்றுக் கொடுத்தது
நட்பு !!
கனவுகளை
லட்சியத்தை
ஒவ்வொரு
இறகாக
உதிரச் செய்த
உறவுகளை
உதிர்த்துவிட்டு
பறக்கத் தொடங்கினேன்!!
சிறகே இல்லாமலும்
வானத்தில்
பறக்கக்
கற்றுக் கொடுத்தது
நட்பு !!
(என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

