“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 28 மார்ச், 2012

அடை காக்கிறேன் ஏக்கச் சூட்டில்!



http://babywallpapers.net/images/wallpapers/Cute%20Baby%20In%20Flower-631200.jpeg

தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே

முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை

முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்

எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை

நீ  மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
என் நெஞ்சின்
ஏக்கச் சூட்டில்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhiyV-oaOfzIQvkgeUZuqBNQR859j8-Mp9P_mLDGv3E7h9zO6nLRuzGtzOE7OeEYNWctZvQ5cCwTX3tFix1IDGTwSJVYdPWuq1LJ42drZrZTATdYxJB1qOc5eO2SVf76q0glmbJGJy5HJ4/s400/sweet+baby+kid+wallpaper+photo+image+high+resolution+printable.jpg

6 கருத்துகள்:

  1. ஆதிராவுக்கு என் அன்பு வணக்கங்கள். தங்களின் கவிதைகளை மிகவும் விரும்புகின்றேன். வியந்து படிக்கின்றேன். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
    இவண்,
    சுந்தரராஜ் தயாளன்
    பெங்களூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதல் என் குடிலுக்குள் தங்களது பாதம் பதிந்துள்ளது. இனிய வரவேற்புகள். இந்த எளிய குடில் ஏற்றமுடையவர்களின் வருகையால் மகிழ்கிறது. முதல் வருகை, முதல் கருத்து இரண்டும் கோடையில் கிடைத்திட்ட பனிக்கூழாய் மனத்தைக் குளிர்விக்கிறது.

      மிக்க நன்றி தயாளன்.

      நீக்கு
  2. தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
    வாய்மை எனப்படும் அஃது

    உங்கள் கவிதைக்காக என் குறள் வெண்பா. ஏற்றுக்கொள்ளுங்கள்.
    சுந்தரராஜ் தயாளன்
    பெங்களூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வெண்பாவில் என் மனம் மகிழ்கிறது. நன்றி ஐயா.

      நீக்கு
  3. இல்லாதவர்களின் வலி புரிந்தமையால் இக் கவிதை கனக்கிறது நெஞ்சில்

    பதிலளிநீக்கு