“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 22 ஜூன், 2010

வெற்றிக்கு வழி செய்யும் டிஸ்லெக்சியா


ஒரு மிகப்பிரபலமான பள்ளியில் ஒரு மாணவன் தமிழ் பாடத்தைப் படிக்காமலே ஓட்டிக்கொண்டு இருந்தான். அவனைப் படிக்கக் கூறினால் மிஸ் நான் டிஸ்லெக்சியான்னு சர்டிஃபிகேட் அபளை பண்ணியிருக்கேன். அது வந்துடும். அதனால் தமிழ் பாடம் எனக்கு தேர்வு எழுதத் தேவையில்லை. தேரிவில் இருந்து விலக்கு கிடைத்து விடும் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாகக் கூறு என்றேன், எனக்கு இந்தப் பாடத்தில் இஷ்டமில்லை மிஸ். அதனால் மருத்துவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டேன். அரசுக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் ஆர்டர் வந்து விடும். என்று சிரித்துக் கொண்டே கூறினான். இப்படியும் ஒரு மாணவனா என்று சிரித்த அதே நேரத்தில் அது என்ன டிஸ்லெக்சியா எனச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த மாணவனுக்கு மனதால் நன்றி சொல்லியபடி அதனைப் பற்றி அறிந்து கொண்டேன்.

. இக்காலத்தில் பல பள்ளிகளில மிக அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டுள்ள சொல் டிஸ்லெக்சியா. முக்கியமாக செல்வந்தர்களின் குழ்ந்தைகளிடம் இக்குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. (நான் பார்த்த வரையில்) சரி டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

மூளை இரண்டு பகுதிகளாகப் பிளவு பட்டு இருக்கும். இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையில் சரியாகத் தொடர்பு இல்லாத நிலைதான் இந்த டிஸ்லெக்சியா குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக வலக்கண் பார்க்கும் காட்சி மூளையின் இடப்புறம் பதிவாகிறது. இடக்கண் பார்க்கும் காட்சி மூளையின் வலப்புறம் பதிவாகிறது. இந்தத் தொடர்பு விஷயத்தில் தொடர்பு கெடும்போது பார்க்கின்ற காட்சியின் ஒட்டுமொத்தத் தோற்றம் மூளைக்குப் போய்ச்சேர்வது இல்லை. இதனால் குழந்தைகள் வாசிப்பதில், எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு திறமை குறைகிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவன் ஆசிரியர் ஒன்றை எழுதினால் அதைத் தப்பும் தவறுமாகத் தன் நோட்டில் எழுதுவான். இவ்வாறு வார்த்தைகளைத் தவறு தவறாக எழுதுவதை வார்த்தைக் குருடு (Word Blindness) என்று கூறுவர்.
டிஸ்லெக்சியா எப்படி ஏற்படுகிறது?

பொதுவாகப் படித்தல் எழுதுதலைக் கட்டுப்படுத்தும் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடுகளை ட்ருமாட்டிக் டிஸ்லெக்சியா (Traumatic Dyslexia) என்பர். இது குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவது இல்லை.

அடுத்து மேற்சொன்னது போல பிறவியிலேயே மூளையின் இடப்பாகத்தில் (Cerebral Cortex) ஏற்படும் குறைபாட்டினால் அப்பகுதி சரியாகச் செயல்படுவது இல்லை. இது பரம்பரையாக ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது. இந்தப் பரம்பரைக் (Hereditary) குறைபாடு, முதல்நிலை டிஸ்லெக்சியா (Primary Dyslexia) என்று அழைக்கப்படுகிற்து. இக்குறைபாடு ஆண் பெண் இருபாலரிடமும் காணப்படும் பொதுவான குறைபாடு ஆகும். இக்குறைபாடு உள்ளவர்கள் வயதானாலும் படிப்பது, எழுதுவதைச் சிரமமாகவே உணர்வர்.

இவை இரண்டும் இல்லாமல் ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாக உருவாவது இரண்டாம் நிலை டிஸ்லெக்சியா (Secondary Dyslexia). இதுவே பொதுவாக சிறுவர்களிடம் அதிகம் காணலாகும் குறைபாடு. இது ஒரு குறிப்பிட்ட வயதிலும், பயிற்சியினாலும் குறையக்கூடியது. இது பத்தில் ஒரு குழந்தைக்கு முழுவதும் இல்லையென்றாலும் சிறிதளவாவது உள்ளதாகக் கணக்கெடுப்புக் கூறுகிறது.

இரண்டம் நிலை டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எப்படி?

· பார்க்க நல்ல புத்திசாலி போலவும் நல்ல பேச்சுத்திறமை உடையவராகவும் இருக்கக்கூடும். ஆனால் அவரின் வகுப்பு மாணவர்களைப்போல எழுதப் படிக்க முடியாமல் தடுமாறுவார்கள்
· சோமபேறி என்றோ, இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்றோ, உன்னால் முடியும் நீ உழைப்பதில்லை என்றோ கூறும் வண்ணம் இருப்பார்கள்..
· இவர்களுள் சிலர் நல்ல பொது அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த தேர்வும் நன்றாக எழுதமாட்டார்கள். அதே சமயம் கேள்விகள் கேட்டால் நன்றாகப் பதில் சொல்லுவார்கள்.
· சிலர் முட்டாள்களைப் போல முகம் வைத்துக்கொண்டும், தாழ்வு மனப்பான்மை உடையவராகவும், பெரும்பாலும் தனியே இருப்பதை விரும்புவராகவும் இருப்பார்கள்.
· .குறிப்பிட்டவற்றில் மட்டும் நல்ல தனித்திறமை கொண்டிருப்பார்கள். பாடுவது, ஓவியம் வரைவது போன்ற கலைகளில் அல்லது கருவிகளைக் (Mechanism) கையாளுவதில் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள்.
· . பொதுவாகப் பகற்கனவு காண்பவராக இருப்பார்கள்.
· படம் பார்த்துச் செயல்களை விளக்குவது, தானாகவே செய்யும் சோதனைகள் இவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
· பல சமயங்களில் படிக்கும்போது தலை வலிப்பதாகவும், தலை சுற்றுவதாகவும் கூறுவார்கள்..
· கண்களில் குறை இருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் கண்களில் ஒரு குறையும் இருக்காது..
· எழுத்துக்கள், எண்கள், சொற்கள் இவற்றில் பல குழப்பங்கள் இருக்கும்.
· .திரும்பத் திரும்ப வரும் சொற்களைப் படிக்கும்போதும், எழுதும்போதும் குழப்பம், எழுத்துக்களை மாற்றிப் படித்தல் போன்றவை இவர்களிடம் சாதாரண நிகழ்வுகளாக இருக்கும். சற்றுப் பெரிய தொடர் அமைக்க மிகவும் சிரமப்படுவர்.
· இவர்களால் அதிக நேரம் கவணத்தை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாது.
· சொல்லாததைச் சொன்னதாகவோ சில சமயங்களில் உணர்வர்..
· சின்னச் சின்ன ஒலிகள் கூட இவர்களின் கவணத்தைக் சிதைத்து விடக்கூடியதாக இருக்கும்.
· வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவைகளால் இவர்களுக்கு டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள குழந்தைகளிடம் படிப்பு மட்டும் ஏன் தடைபடுகிறது என்று அறிந்து கொள்ள வேண்டாமா? அதை அறிந்து கொள்ளும் முன்பு படிப்பது அல்லது கற்றுக்கொள்வது என்பது இயல்பாக எப்படி நடக்கின்றது என்று தெரிந்து கொள்வது அவசியம்.

· கற்றுக்கொள்வது என்பது பல நிலைகளில் நிகழ்கிறது.. ஒலிகள் இணைந்து வார்த்தைகளை உருவாக்குகிறது என்பதை உணர்தல்.
· வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்.
· ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்குமான தொடர்பை உணர்ந்துகொள்ளுதல்.
· ஒலிகளையும் எழுத்துக்களையும் இணைத்து சொற்களாக்குதல்.
· வரிகளில் அமைந்துள்ள ஒழுங்கை அறிந்து ஒரு வரியைப் படித்த பின் அதற்குஅடுத்த வரி, பின் அடுத்த வரி என்று வரிசைபடுத்தி படிக்க இயலுதல்।
· முன்பே அறிந்து கொண்டவற்றையும் புதிதாகப் பார்ப்பவற்றையும் தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ளுதல்.
· பார்த்தவை, படித்தவற்றை நினைவில் நிறுத்துதல்.
· புதிய கருத்துப் படிவங்கள், உருவங்கள், உத்திக்ளை உருவாக்குதல்.

இவை அனைத்தும் சரிவர நடக்கும்போதுதான் நாம் படிப்பது, எழுதுவது ஆகியவை நடைபெறும். இவற்றில் சிலவற்றில் ஏதேனும் சிலவற்றைச் செய்ய முடியவில்லை என்றாலும் அச்செயல்பாட்டின் ஒழுங்கு சீர் குலைந்து விடும். படிப்பது, எழுதுவது, நினைவில் நிறுத்துவது இவற்றில் குறைபாடு உண்டாகும். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இவற்றில் முதல் இரண்டு அல்லது மூன்று நிலைகளிலேயே தடுமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களால் ஒலி வடிவ எழுத்துக்களையும், வரி வடிவ எழுத்துக்களையும் உருவாக்குவதையும், ஒலி. வரி வடிவ எழுத்துக்களில் உள்ள தொடர்புகளை உணர்வதிலும் குழப்பம் ஏற்படுவதுடன், பல ஆணைகளை ஒன்றாகக் கொடுக்கும்போது அவர்களால் அவற்றைச் சரிவர உணர முடிவதில்லை.
குழந்தைகள் படிக்கையில் அம்மா என்பதை என்றா எழுத்துடன் முதலில் ம் ஐக்கூட்டி பின்பு மா வைக் கூட்டி படிப்பர். பின்பு போகப்போக எழுத்துக்கள் மனதில் பதிந்து விடும். இது போலவே போகப் போக ஏற்கனவே பார்த்துப் பழகிய சொற்களும் மனத்தில் பதிந்து விடும். இதனால் எழுத்துக்களைக் கூட்டாமலே குழந்தைகளால் படிக்க முடிந்து விடும். ஆனால் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்த இயல்பான செயலைச் செய்ய முடியாமல் தவிப்பர். உதாரணமாக மாடு என்பது டுமா வாகவும் வாசி என்பது சிவா வாகவும் இவர்களுக்கு மாறி காட்சியளிக்கும். இதனால் இதனால் இவர்கள் மிக மெதுவாகவும் ஏகப்பட்ட தவறுகளுடனும் படிப்பார்கள்.


இதனைக் கண்டறிவது எப்படி? வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவை டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா வந்துவிட்டதே என்று அதிகமாகக் கவலைப் படத் தேவையில்லை. இதில் ஒரு நல்ல அம்சமும் உள்ளது டிஸ்லெக்சியாவால்தான் நான் இவ்வாறு பெருமைப் பட முடிந்தது என்று சொல்லி இன்புறும் காலமும் உண்டாகலாம். யார் கண்டது? அப்படிப் பெருமைப் பட்டவ்ர்க்ளைப் பற்றிய் பெரிய பட்டியலைப் பார்த்தீர்களானல் எனக்கும் டிஸ்லெக்சியா வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும்.

http://australianpolitics.com/images/people/einstein.jpg

இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? நோபல் பரிசுக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே. முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிப் பார்ப்போம். இவர் ஒன்பது வயது வரை எதையும் படிக்கும் திறனின்றி இருந்தாராம். ஒரு திடீர் திருப்பமாகப் பனிரெண்டாம் வயதில் கணிதத்திலும், இயற்பியலிலும் சக்கைப் போடு போட ஆரம்பித்தாராம்.
இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவி ஒன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரி உருக்களையும் இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார்.. இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான நூல்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்..

http://www.biografiasyvidas.com/monografia/edison/fotos/edison_laboratorio_west.jpg

இவரைத் தெரியாதவர்களும் இருக்க முடியாதே.
தனது பெயரில் சாதனை அளவான ஆயிரத்து தொண்ணூற்று மூன்று மின்சாரப் பொருள்களை கண்டறிந்து பதிவு செய்தார்। இத்துனை உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பள்ளிகளிலும் சரி வெளியிடங்களிலும் சரி அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழும் வினாக்களுக்கு, முக்கியாமாக ஒரு பொருளைக் கண்டுபிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம். ஒற்றையா ரெட்டையா கூடப் போட மாட்டோம். கண்களை மூடிக்கொண்டு குருட்டாம் போக்கில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று கூறிவிடுவோம்.. அது சரியான விடை என்று பாராட்டும் பெற்று விடுவோம். அப்படி இன்று காண்கின்ற பொருள்களில் பெரும்பானமையான் பொருள்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த டிஸ்லெக்சியாவுக்கு ஒருவாறு அல்வா கொடுத்தவரே.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/President_Woodrow_Wilson_portrait_December_2_1912.jpg/245px-President_Woodrow_Wilson_portrait_December_2_1912.jpg

.மேலே இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த தாமஸ் உட்ரோ வில்சன். தமது பதினோராம் வயது வரை ஒரு எழுததைக் கூட வாசிக்க முடியாதவராக இருந்தார் என்றால் நம்மால் நம்ப் முடிகிறதா? அதுதான் உண்மை.
..இதைப் படித்தவுடன் மேலே கூறியதைப் போல நமக்கும் டிஸ்லெக்சியா வந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்று கிறதல்லவா? ஆனால் எல்லோரும் இப்படி உயர்ந்து விட முடியுமா? இத்தகு குறைபாடு ஒன்றைப் பெற்றவர்கள் தம் வாழ்வில் சாதித்து எப்படி? ஒரு கதைவை அடைத்தால் இன்னொரு கதவைத் திறந்து விடுவான் என்பது போல இறைவனின் படைப்பில் ஒரு திறன் குறைந்தால் அதனையும் மிஞ்சி வெற்றி பெறும் அளவுக்கு வேறு ஒரு திறன் நிறைந்து இருக்கும். அதனாலேயே இன்று ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று கூறத் தொடங்கியுள்ளோம். அது எத்துனைச் சரியானது. மேலே கூறிய இவர்களையும் மாற்றுத்திறனாளி என்று அழைப்பதில் தவறு இல்லையே!
.
இவர்களிடம் முயற்சியும் தொடர்ந்து எதையும் செய்யக்கூடிய பயிற்சி மனப்பானமையும் இருந்ததே இவர்கள் எளிதில் இக்குறைபாட்டை வெற்றி கொண்டமைக்கும், உலகையே வெற்றி கொண்ட்மைக்கும் இது முற்றிலும் தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி. இதனைத் திறன் (INDUVIDUAL EFFORTS) எனலாம். குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனை போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.
ஒன்று கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறு குறைபாடே அன்றி பெரிய நோய் அல்ல. எனவே இருந்தாலும் குழந்தைகளால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.. அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதளவில் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்ல முறையான அணுகுமுறையும், சிறந்த பயிற்சியும் அம்மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவது இவர்களின் கடமையே.
குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனைப் போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றாலும் உதவவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும். ஏனெனில் சிறந்த வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பவை 1% உள்ளூக்கமும் 99% விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.. இதனை வள்ளுவர்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர்
சோர்வு இல்லாமலலும் தன் முயற்சியில் குறைவு இல்லாமலும் முயல்கின்றவர் தம் முயற்சிக்கு இடையூறாக வரும் ஊழ்வினையையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து விடுவர். அப்படி இருக்க, டிஸ்லெக்சியா என்ன அம்னீஷியா என்ன... எல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடுவது உறுதி...ஆகையால் ஆசிரியர்களே! பெற்றோர்களே! உதவுங்கள் வருங்கால் இந்தியாவுக்கு. ஆக்குங்கள் டிஸ்லெக்சியா குறைபாட்டுக் குழந்தைகளை, ஒரு எடிசனாக், ஒரு ஐன்ஸ்டினாக, ஒரு உட்ரோ வில்சனாக!!!


2 கருத்துகள்:

  1. என்றும் போல வந்து கருத்து கூறிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி குணா அவர்களே..என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு