“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஒரு தாயின் ஜனனம்


http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை


உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்


ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று


உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.


என்னை 
தாயாகத் தத்தெடுத்த 
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!



8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் அன்பான பாராட்டுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் ஐயா

      நீக்கு
  2. தங்கள் வலைத்தளம் சிறப்புடன் அமைந்துள்ளது.வாழ்த்துகளும் மனமுவந்த பாராட்டுகளும்.ஆமாம்;தமிழ்ச்சான்றோர்கள் அரும்பாடுபட்டு வழக்கொழியச் செய்த ஜனனம் போன்ற சொற்களுக்கு நீங்கள் மறுவாழ்வு வழங்கலாமா?இந்தத் தவறைச் செய்கிற காரணத்தால்தான் நாகசாமிகள் சமற்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை எனத் துNiச்சலுடன் எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாதைக்குரிய மறைமலை இலக்குவனார் ஐயா, தங்களின் பாதம் என் வலைப்பூவில் பட்டமை யான் பெற்ற பேறு. வருகைக்கு முதலில் நன்றி ஐயா.

      தாங்கள் சொல்வது சரிதான். வடமொழியைப் பயன் படுத்துவது தவறுதான். மன்னிக்க வேண்டும் ஐயா.இனி தமிழ்ச்சொற்களைத் தவிர வேற்று மொழிச்சொற்களைப் பயன்படுத்த மாட்டேன். தங்களது அன்பான கருத்துக்கு நன்றி ஐயா.

      இது போன்று தொடர்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தங்களைப் போன்ற அறிஞர்களின் கடமையாகவும் உடனே திருத்திக் கொள்வது எங்களைப் போன்றவர்களின் கடமையாகவும் இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்.

      நீக்கு
  3. தட்டச்சு செய்கையில் ஆங்கில எழுத்துகள் உள்ளே நுழைந்து எள்ளிநகையாடுகின்றன.அச்சுப்பிழையைப் பொறுத்தருள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாகப் பிறமொழி எழுத்துகள் நுழைவதை சில நேரங்களில் தடுக்கத்தான் முடிவதில்லை. நன்றி ஐயா.

      தங்கள் தந்தையாரின் நினைவுநாள் விழாவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்

      நீக்கு