“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 11 நவம்பர், 2015

கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ பாரதி கிருஷ்ணகுமார்




ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க......
எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்.....
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு அரங்கத்தின் முன் சென்று ஒருவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டது எனக்கு முதல் அனுபவம்.
அந்த ஓரிரு வார்த்தைகளோடு முகவரி அட்டையைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்ற போது நினைக்கவில்லை அவரது ‘அப்பத்தா’, ‘அருந்தவப் பன்றி - மகாகவி பாரதி’ என்னும் இரு நூல்கள் என் இல்லம் தேடி வரும் என்று. இரண்டு இரவுகளில் இரண்டு நூல்களையும் படித்து முடித்த போது என்னுள் எஞ்சியது பெரும் வியப்பு.
குறிப்பாக.... அருந்தவப் பன்றியா பாரதியா....... என்ற வினாவோடு நூலை விரித்த போது விரிந்து கொண்டே போனது வியப்பு. பாரதி.. பாரதி என்று கூறும் ஒருவரும் கூறாத புதிய செய்திகள் அடங்கியது அந்த ஆய்வு நூல். ஆனால் அது எந்தப் பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யாத நூல். அந்த எழுத்துகளைப் பதித்த விரல்களுக்கு என்ன பரிசு தருவது......... !? விமர்சனத்தைத் தவிர.......அது பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில்.....
இப்போது.. விகடன் நேர்காணல் பற்றி.......
நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும் நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை உரையாடலுக்கான தேவையும் உரையாடலும் இருந்து கொண்டே இருக்கும்....... என்று சொல்லும் நம்பிக்கை....
எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்குச் சுதந்திரம் என்று கேட்கும் தார்மீகம்......
அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் சமத்துவத்துக்கான குறியீடு.... என்ற பண்டைய மரபின் மீதான எள்ளல்.......
சாக்ரடீசின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். இறந்து போகும் போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப் படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை...... என்று குமுறும் அறச்சீற்றம்...........
இந்தியாவில் இருந்த போது ஆஷ் தம் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரப் படுத்தியுள்ளது அவரது குடும்பம். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் என்ன ஆனாள்? என்று கேட்கும் வாஞ்சை........
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல, இலண்டன் சாராயக் கடைகளிலும் பன்றித் தொழுவத்திலும் வேலை செய்து ஒரு துப்பாக்கி வாங்கி 16 வருடங்கள் காத்திருந்து படுகொலை செய்கிறானே உத்தம்சிங்........ இதுதான் ரெளத்திரம் பழகுவது... என்று பாரதியின் வாக்குக்கு ஆதாரம் கொடுக்கும் தெளிவு........
சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........
இந்தக் கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ என்று பழகிய ரெளத்திரம்......
இத்தனைக்கும் ஒட்டு மொத்தமான ஒரு பெயர்தான் பாரதி கிருஷ்ணகுமார் என்னும் ஆளுமை.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது



இன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

பாரதி பணிச்செல்வர் விருது பெற்ற தமிழச்சிக்கு வாழ்த்துகள்

நேற்று (11.09.15) நம்ம செல்லத்தமிழச்சி பாரதி பணிச்செல்வர் விருது பெற்றார்கள்.. அழகா குட்டியா ஒரு ஏற்புரை சொன்னாங்க. அவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது.......
சென்ற ஆண்டு இவ்விருதினைப் பெறும் பேற்றினை நானும் பெற்றது மகிழ்வாக