“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 6 ஜூன், 2012

எண்ணெயில் கொப்பளிப்பதா…..



     
 சென்னையில் இலக்கிய விழாக்களுக்குச் சென்றால் கை நிறைய ஆயில் புல்லிங் ஆயில் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வரலாம். இவற்றை இவர்கள் விளம்பரத்திற்காகத் தருகிறார்களா இல்லை விறபனை ஆகவில்லை என்பதற்காகத் தருகிறார்களா என்று புரியவில்லை. ஆனால் குறைந்தது இருபது முப்பது பாக்கெட்கள் கிடைக்கிறது என்பது உண்மை.
      வயிறு சோற்றுக்கு அழுகுது, குடுமி பூவுக்கு அழுகுது என்று பழமொழி கூறுவார்கள். அது போல இங்கு ரேஷன் கடையில் கியூவில் நின்று ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி ஒரு மாதம் முழுவதும் பயன் படுத்தும் என்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் நாட்டில் இது சாத்தியமாகுமா. இருந்தாலும் ஐந்து நட்சத்திர விடுதிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாதவர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்வது இல்லையா அது போலத்தான் இதுவும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடலுக்கு எவ்வளவு  தேவையோ அவ்வளவு தேவையானது ஆயில் புல்லிங் (Oil Pulling Therapy OPT} என்று சொல்லப்படும் எண்ணெய் கொப்பளித்தலும்.

முதலில் ஆயில் புல்லிங் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணெயை (Sesame seed Oil= Til Oil} வாயில் ஊற்றிக்கொண்டு கொப்பளிப்பதே ஆயில் புல்லிங் ஆகும். 

 தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும்வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம். இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எண்ணெய் கொப்பளித்து முடித்து வாஷ் பேசினில் உமிழ்ந்து விட்டு வாஷ் பேசினை நன்கு கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பும் அதனால் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அல்லது மணல் நிரம்பிய குப்பைத்தொட்டியில் உமிழலாம். அதனையும் அவ்வப்போது மாற்றுவது அவசியம். அதுவும் முடியாத வேளையில் பிளாஸ்டிக் கவர்களில் உமிழ்ந்து அதனை எறிவது சுலபமான முறை. கண்டிப்பாக உமிழும் போது கண்டிப்பாக நடைபாதையிலோ அல்லது தோட்டத்தில் செடிகளின் அருகிலோ உமிழக்கூடாது.
 எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.
ஆனால் இந்த எண்ணெய் மருத்துவம் நம் சமுதாயத்தி பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன., நல்லெண்ணெயை வாயில் போட்டுக் கொப்பளிப்பது, காலையில் பழைய சோற்றுத் நீரில் நல்லெண்ணெயை விட்டு குடிப்பது இவையெல்லாம் பண்டைய முறை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய சாரகா (CHARAKA} என்னும் ஆயுர்வேத மருத்துவ நூலில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிக்கும் இம்மருத்துவம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இப்போது இம்மருத்துவம் ஆயில் புல்லிங் என்னும் பெயரில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வருகிறது. 

இதன் பயன் பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது. ஆயில் புல்லிங் மூலம் கழுத்துவலி, உடல் வலி, அலர்ஜி, ஆஸ்துமா, தோல்நோய், அரிப்பு, கரும்படை இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான  நோய்கள் குணமடைவதாகக் கூறுகின்றனர். இந்த ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் கொப்பளிப்பை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்
நல்ல உறக்கம் உண்டாகிறது. பற்கள் வெண்மை நிறம் அடைகிறதுவாய் புண் நீங்குகிறதுவாயு தொந்தரவு நீங்குகிறதுதசை நோய்கள் விலகுகிறது மார்பு நோய் நீங்கு கிறதுமுதுகு வலி பல் நோய்கள் விலகுகிறது காதுநோய்கள் விலகுகிறது, கண் நோய்கள் விலகுகிறது கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது மூல நோய்கள் விலகுகிறது சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறதுபக்கவாத நோய் விலகுகிறதுவலிப்பு நோய்கள் விலகுகிறது புற்று நோய் கட்டிகள், மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல் நோய்,  புற்று நோய்,  பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற  எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதனை சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் கராஷ் (Dr. KARACH}  என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
அப்பரம் என்ன நமக்குத்தான் வடிவேலு சொல்லுவது போல நம்ம ஆளுங்க எவ்வளவுதான் சொன்னாலும் வெளிநாட்டார் சொன்னால் வேதவாக்கு ஆயிற்றேன். செய்வோம் ஆயில் புல்லிங்க்……

2 கருத்துகள்: