“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 20 ஜூன், 2010

தலைமுடியை வளர்க்கும் விரல் நகங்கள்....







மேலே இருக்கிற படத்தைப் பார்த்தவுடனே புரிந்து இருக்குமே நான் எதைப்பற்றி சொல்லப்போகிறேன் என்று. வழுக்கை பிரச்சனையே பலருக்கு வாழ்க்கை பிரச்சனையாக மாறிவிடுகிறது. முடி இது இலையில் இருந்தால அசிங்கம். தலையில் இலையில் இல்லாவிட்டால் அசிங்கம். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான் என்பார்கள். இதிலிருந்து மயிர் உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது.. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப் போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி மிக்க மனிதனின் நிலை எப்படிச் சொல்வது? திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாததற்கு முடியும் முக்கிய காரணமாக அமைந்து உள்ளது . கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தாலும் ஒத்துக்கொள்ளும் பெண்கள் மேல் மாடி காலி என்றால் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடி முடி வளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் ஒன்று வந்து விடக் கூடாது. அததனையையும் பயன் படுத்துவதுடன் வேர், இலை, தழை என்று உலகில் கிடைக்கும் அத்தனை உரங்களையும் போட்டு மயிர்ப்பயிர் வளர்க்க அரும்பாடு பட்டு கடைசியில் இருக்கிற ஒன்றிரண்டையும் இழந்து மனம் வெதும்பி வாழ்கின்றனர். இத்துடன் முடிந்ததா? இப்போது நிலத்தைக் கீறிப் பயிர் ந்டுவது போல தலையையும் கீறி மயிர் நட்டு விடுகின்றனர். இதற்கு (Hair Plantation) ஹேர் பிளாண்டேஷன் என்று பெயர்.


http://www.hoshairclinic.com/images/mianHeader2.jpg


பிளானடேஷனுக்கு முன்னால் பிளாண்டேஷனுக்கு பின் என்று போட்டோ போட்டு கடை விரித்திருக்கும் நிருவங்கள் இன்று மூலைக்கு மூலை. செலவுதான் நட்ட முடியுடன் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது என்கின்றனர்.
இப்பிரச்சனைக்கு விரல் நுனியில் இருக்கிறது தீர்வு. விரல்கள் பத்தும் மூலதனம் என்பது பண நலத்திற்கு மட்டும் இல்லங்க.. உடல் நலத்திற்கும் பொருந்தும்.
இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டை விரலைத்தவிர) ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களும் இடக்கையின் நான்கு விரல்களுடன் நன்கு உராயுமாறு விரல்களை அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். விரல்களின் பின் பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் இவ்வாறு நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டி விடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மெலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது. காசா? பணமா? சும்மா இருக்கும் போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாக இருந்தது போலவும் இருக்கும். முடியும் வளர்ந்து விடும் அல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒரு கை பார்த்து விடலாமே! இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. கைகள் எப்போதெல்லாம் வேலையற்று இருக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாமே.. தொடங்கி விட்டீர்களா? தலை நிறைய அடர்த்தியாக வளர வாழ்த்துக்கள் நண்பர்களே!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக