
இவரைப் பார்த்து விட்டு எண்ண நினைக்கத்தோன்றுகிறது. இவர் தன் உடலின் ஒரு பக்கத்தை மறந்தவர். (பொய் பொய் என்று ஒரு குரல் கேட்கிறது.....) உன்னக் கண்ட துண்டமா வெட்டிப்போட்டாத்தான் என் மனம் ஆறும் என்று யாரோ கூறுவது என் காதில் விழுகிறது. இல்லை இல்லை கூறக் கேட்டிருப்போம். அது போல அவனை மாறு கால் மாறு கை வாங்கனும் என்று ஆத்திரத்துடன் சொல்வதையும் கேட்டிருப்போம். புரட்சித் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இந்த மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனைதான்.
பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்
மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.
மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....
ஆதிரா..
பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்
மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.
மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....
ஆதிரா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக